பட்டப்பகலில் அரசுப் பேருந்தில் பயணித்த இளம்நடிகையிடம் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பை காண்பித்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்புக்காக இளம் நடிகை ஒருவர் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அங்கமாலி என்ற இடத்தில் இளைஞர் ஒருவரும் அந்தப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் பயணிகளின் கூட்டம் இருந்த போதும், அந்த இளைஞர், இளம் நடிகையிடம் தொட்டு தொட்டு பேசியதோடு, அந்தரங்க உறுப்பையும் காட்டியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம் நடிகை சுதாரித்துக் கொண்டு, அந்த நபரை தனது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தார். வீடியோ எடுத்தபடி அந்த இளைஞரிடம் கேள்வி கேட்டதும், பேருந்தில் இருந்து இறங்க அவர் முயன்றார்.
பேருந்து நின்றதும் எகிறி குதித்து தப்பியோடிய இளைஞரை, நடத்துனரும், சக பயணிகளும் துரத்திச் சென்று பிடித்து, நெடும்பஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இந்த இளைஞர் கோழிக்கோட்டை சேர்ந்த சவாத் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனக்கு நேர்ந்த துயரத்தின் போது உதவிய பேருந்து ஊழியர்கள் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
This website uses cookies.