மீண்டும் BJP ஆட்சிக்கு வந்தால் எல்லா மாநிலங்களிலும் மணிப்பூர் சம்பவங்கள் நடக்கும்.. எச்சரிக்கும் நிர்மலா சீதாராமனின் கணவர்!
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரங்கள், வெற்றி வியூகங்கள் என அரசியல் கட்சிகள் படுவேகமாக பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு பெறுகிறது. நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், பாஜக அரசு மீது தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். தற்போது அவர் கூறிய கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தனையாளர் அமைப்பு சார்பில் தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழல் குறித்த கலந்துரையாடல் நிக்ழச்சி நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
மேலும் படிக்க: வாக்கு சேகரிக்க வரவில்லை… உங்கள் ஆசி வாங்கவே வந்தேன் : முதியோர் இல்லத்தில் கண்கலங்கிய அண்ணாமலை!
இதில் பேசிய பரகலா பிரபாகர், உலகின் மிகப்பெரிய கட்சி என கூறப்படும் பாஜகவில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை, மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மணிப்பூர் சம்பவங்கள் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் என எச்சரித்துள்ளார்.
அதே போல மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கூறும்போது, பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.