இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். மறுபக்கம் மாநிலங்களவையில் நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
சிறிது நேர விவாதத்திற்கு அனுமதி வழங்குவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் பேசியபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மைக்கை அணைத்து தன்னை அவமானபடுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்பி திருச்சி சிவா, “ கார்கே பேசும்போது ஏன் மைக் அணைக்கப்பட்டது. யார் உத்தரவிட்டு மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைப்பது போன்ற நடவடிக்கை எப்போதும் நடந்ததில்லை.” என்றார்.
இதை தொடர்ந்து கார்கே பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்தார். ஜெகதீப் தங்கர் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணிவரை முடங்கியது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.