பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அண்மையில் சென்னையை அடுத்துள்ள பம்பலில் நடந்த திமுக நிகழ்ச்சியில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். நாங்கள் எவ்வளவோ பிரதமரை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். நான் மட்டும் அமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்திருந்தால், மோடியை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன், எனக் கூறினார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்தியரஞ்சன் தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே, சனாதனம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் உதயநிதி மீது வடமாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மற்றொரு திமுக அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
This website uses cookies.