15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து வாயில் ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்த சம்பவம் தலைநகர் டெல்லியை உலுக்கியுள்ளது.
டெல்லியில் செருப்பு தொழிற்சாலையின் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஜெய் பிரகாஷ் (31). இவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை கவனித்துக கொள்ள வருமாறு, தான் பணியாற்றி வந்த தொழிற்சாலையில் வேலை செய்து வரும் 15 வயது சிறுமியிடம் கேட்டுள்ளார். அவரும், இரக்க குணத்துடன் அதனை ஏற்று அவரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் சிறுமியை தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மேலளார் ஜெய் பிரகாஷ். இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சிறுமியை நிறுத்திய பிரகாஷ், அவளின் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றி சித்ரவதை செய்துள்ளார். இதனால், சிறுமி வீட்டிற்கு வந்த நிலையில் மயக்கமடைந்தாள். உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் பிரகாஷை கைது செய்தனர். பிரகாஷ் மீது நங்லோய் காவல் நிலையத்தில் கற்பழிப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.