பேய் பிடித்ததாகக் கூறி ஆசிரமத்தில் விடப்பட்ட சிறுமியின் வாயில் எரியும் கட்டையை திணித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மகாசாமுண்ட் மாவட்டத்தில் உள்ள பதேராபலி எனும் கிராமத்தில் ஜெய் குருதேவ் மனஸ் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பேய் பிடித்ததாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு அவரது குடும்பத்தினர் அழைத்து வந்து உள்ளனர்.
அங்கு அந்த சிறுமி தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாயாசத்தில் விஷத்தை கலந்து விட்டதாகக் கூறி, ஆசிரம நிர்வாகியான குரு மற்றும் அவரது சீடர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேர் சேர்ந்து சிறுமியை கடுமையாக அடித்து, தாக்கியுள்ளனர். அதோடு, எரியும் மர கட்டையை அந்த சிறுமியின் வாயின் உள்ளே திணித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சிறுமியின் சகோதரர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…
நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
This website uses cookies.