ஆந்திரா : இருசக்கர வாகனத்தை வழிமறித்து பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை சரமாரியாக தாக்கிய இளம்பெண். வைரலான வீடியோவை பார்த்த மகளிர் ஆணையத் தலைவி இளம்பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பணி முடிந்து இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்தை மறித்த நபரொருவர் அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண் கீழே கிடந்த கம்பை எடுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் – உங்களைப் போன்றவர்கள் உள்ள காரணத்தினால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகிறது என்றும் எதற்காக என்னை வழிமறித்து சில்மிஷம் செய்தாய் என்றும் கேட்டவாறு சராமாரியாக அடித்து தாக்கத் துவங்கியுள்ளார்.
இதனால் வலி தங்காமல் அந்த நபர் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் வீடியோ காட்சிகளை ஆந்திர மாநில மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெண் ஊழியரின் தைரியத்தை பாராட்டியுள்ளார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.