ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவராக இருந்தவர் சோம்ராஜ். இவர் திடீரென நேற்று காணாமல் போனார். அவரை பல இடங்களிலும் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சோம்ராஜின் வீட்டுக்கு சிறிது தொலைவில் மரம் ஒன்றில் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டு உள்ளது. உயிரிழந்த அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளன.
இதனை கவனித்த கிராமவாசி ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, உடனடியாக சென்று உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஹிராநகரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்து உள்ளனர். மருத்துவ மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கத்துவா மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு கொத்வால் அமைத்துள்ளார். குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு நடத்தப்படுவார்கள் என அவர் உறுதி கூறியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.