கர்நாடகா ; கர்நாடகா அரசு மருத்துவமனையின் பிணவறையில் இருக்கும் பெண் சடலங்களின் உடல்களை நிர்வாணமாக ஊழியர் வீடியோ எடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டத்தில் மடிக்கேரி என்னும் பகுதியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடகதாலு பகுதியைச் சேர்ந்த 30 வயதான சையத் ஹுசைன் என்பவர், கடந்த 2021ம் ஆண்டு கொரோனா முன்கள பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
இதனிடையே, மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், சையத்திற்கு தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர், சில தினங்களுக்கு பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சையத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், திடுக்கிடும் வீடியோக்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
சையத் தான் வேலைப் பார்த்த பிணவறையில் பெண்களின் உடல்களை நிர்வாணமாகப் படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். மேலும், அங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசுவதையும், நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களையும் சையத் தனது செல்போனில் வைத்துள்ளார்.
இந்த அதிர்ச்சி தகவல்கள் அம்பலமான நிலையில், பிணையில் வெளியே வந்த சையத் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.