ஒடிசா – கியாஜ்ஹர் மாவட்டம் சரசபசி கிராமத்தை சேர்ந்த சாரதா (70) என்பவர் கணவரை இழந்த நிலையில், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி அதே கிராமத்திலேயே வசித்து வந்த நிலையில், சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வந்தார். நோய் காரணமாக மூத்த மகன் கருணா அண்மையில் உயிரிழந்த நிலையில், இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதேகிராமத்தில் தனியே வசித்து வந்தார்.
சஸ்துருகனுக்கு சொந்தமான தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். சாரதா நேற்று தனது இளைய மகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்துள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியதுடன், தனது தாயார் என்று கூட பார்க்காமல் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.
மேலும், மாமியாரை காப்பாற்ற சென்ற மனைவியையும் அவர் தாக்கினார். இறுதியில் மகனிடம் இருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.