உத்தரபிரதேசத்தில் சாலையில் இறந்து கிடந்த மகனின் உடலை தள்ளுவண்டியில் வைத்து தாய் தள்ளிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் பகுதியைச் சேர்ந்த ராஜு என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே உயிரிழந்து கிடந்தார். பல மணிநேரமாக உடல் அங்கேயே கிடந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர், இறுதிச் சடங்கு செய்வதற்காக உடலை எடுத்துச் செல்ல வாகன உதவியை நாடினார். ஆனால், எதுவும் கிடைக்காத நிலையில், ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் தள்ளிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டனர். பின்னர், அங்கிருந்த காவல்நிலையத்தின் உதவியை நாடினர். அங்கு பணியில் இருந்த காவலர் உதவி செய்ததோடு,
மேலும் சிலரிடமும் நிதி திரட்டி ராஜூ உடலை இறுதி சடங்கு செய்ய உதவினார்.பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே, ராஜுவின் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலான நிலையில், மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.