மணிப்பூரில் 3 குழந்தைகளின் தாயை வீட்டிற்குள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்றதாக பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
இம்பால்: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வன்முறை நிகழ்ந்து வருகிறது. அங்கு காணப்படும் மைத்தேயி மற்றும் குகி ஆகிய பழங்குடியினர் இடையே இந்த மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு இந்த வன்முறைச் சம்பவங்களால் பலர் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரம், உறவுகள் ஆகியவற்றை இழந்துள்ளனர்.
குறிப்பாக, ஒரு பெண் நிர்வாணமாக பல ஆண்கள் முன்னால் துரத்தப்பட்டு வெளியான வீடியோ, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் போலீஸ் தடியடிகளுக்குப் பின்னால் ஓரளவு மணிப்பூரில் நிலமை கட்டுக்குள் இருந்தது. இருப்பினும், ஆங்காங்கே மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன.
இதனிடையே நடந்த 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மேலோங்கியது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் மணிப்பூரின் ஜிமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் வீட்டினுள் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த கலவரக்காரர்கள், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிரோடு எரித்துக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, மணிப்பூரில் வன்முறைச் சம்பவம் கட்டுக்கடங்காமல் மீண்டும் சென்று கொண்டிருக்கிறது. அதேநேரம், இதுகுறித்து பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தை வைத்து விஜயை தாக்கினாரா சத்யராஜ்? மேடைப்பேச்சால் சர்ச்சை!
அந்தப் புகாரில், தனது மனைவி 4, 5 கலவரக்காரர்களால் வீட்டினுள் புகுந்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எனது கண் முன்னே உயிரோடு எடுத்துக் கொல்லப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கப்பதிவு செய்துள்ள மணிப்பூர் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.