கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்க தாய் எடுத்த அதிரடி முடிவு : இனி கஞ்சாவை தொட மாட்டேன் என கதறிய மகன்..!!(வீடியோ)

தெலுங்கானா : கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை அதிலிருந்து மீட்க தாய் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமலும், பெற்றோர் பேச்சை கேட்காமலும் ஊர் சுற்றி வந்தான்.

நாள் முழுவதும் கஞ்சா போதையில் இருக்கும் தன்னுடைய மகனை திருத்த அதனுடைய தாய் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. தன்னுடைய மகனை கஞ்சா போதையில் இருந்து மீட்டு அவனை திருத்த கோரி அந்த தாய் பலமுறை போலீசாரின் உதவியை நாடினார்.

போலீசார் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் பலமுறை அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவன் திருந்தவில்லை.

இந்தநிலையில் தன்னுடைய மகனை எப்படி திருத்தலாம் என்று ஆலோசித்து அந்த தாய் மகனை எப்படியாவது போதையிலிருந்து மீட்டு அவனுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

தன்னுடைய மகனின் நல்வாழ்விற்காக எதையும் செய்யத் துணிந்த அந்த தாய், மகனை வீட்டிற்கு எதிரில் உள்ள தூண் ஒன்றில் முதலில் கட்டி பின்னர் தன்னுடைய மகள் உதவியுடன் கண்ணில் மிளகாய் தூளை கொட்டினார்.

கண் எரிச்சல் காரணமாக அலறி துடித்த மகனிடம் இனிமேல் நான் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடு என்று கேட்டார் அந்த தாய். ஆனால் அவன் கஞ்சாவை விட்டுவிடுகிறேன் என்று கூற தயங்கினான்.

எனவே மேலும் முகத்தில் மிளகாய் பொடியை பூசி தண்டனையை கடுமையாக்கினார் அந்த தாய். இந்த நிலையில் எரிச்சல் தாங்காமல் அந்த சிறுவன் இனிமேல் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தான்.

இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சூரியாபேட்டை போலீசார் விரைந்து சென்று தாய், மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்துகின்றனர்.

என்னதான் பொதுவெளியில் மகனை துன்புறுத்துவது குற்றம் என்றாலும் தாயின் நடவடிக்கை சரியே என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

7 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

7 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

9 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

9 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

9 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

10 hours ago

This website uses cookies.