நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக்கொண்டிருக்கும்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் கோபமடைந்த மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என எச்சரித்தார்.
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance – இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘இந்தியா’ என கூட்டணிக்குப் பெயர் வைத்ததற்கு எதிராக பாஜக எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 நிகழ்வுகளையும் குறிப்பிட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். பாஜக மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஐஎம் எம்.பி சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” “அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்” என்று மக்களவையிலும் “இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்” என்று மாநிலங்களவையிலும் இந்த வாரம் ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர். அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார்.” என விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
தொடர் தோல்வி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க…
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
This website uses cookies.