காய்கறிகள், பழங்களை வாங்கிக் கொண்டு வரச்சொன்ன துணை முதலமைச்சர்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை மங்களகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்த ஜனசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலசவுரி, உதய ஸ்ரீனிவாஸ் ஆகியோர் காய்கறிகளை வழங்கினர்.
அப்போது பேசிய பவன் கல்யாண் இனிமேல் என்னை யாராவது சந்திக்க வந்தால் சால்வை,மலர் கொத்து ஆகியவற்றை கொண்டு வராதீர்கள் .
அதற்கு பதிலாக விரைவில் ஆந்திர முழுவதும் திறக்கப்பட இருக்கும் அண்ணா உணவகத்திற்கு தேவையான பொருட்களை என்னிடம் கொடுத்தால் அவற்றை அந்த துறைக்கு அனுப்பி வைப்பேன்.
நீங்கள் வெகுமதியாக எனக்கு ஒன்றையும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. சால்வை, பூங்கொத்து ஆகியவை போன்ற எனக்கு தேவையில்லாத பொருட்களை கொடுக்காதீர்கள். எனக்கு பரிசாக கொடுக்கப்பட்ட சிலைகளை என்ன செய்வது என்றே தெரியவில்லை.
பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றின் போது பரிசுகளை வழங்க விரும்பும் பொதுமக்கள் ஆந்திராவில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அண்ணா உணவகம், ஆதரவற்றோர் இல்லம் ஆகியவற்றுக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்.
இதன் மூலம் குறைந்தது ஒரு 10 பேர் வயிறு நிறைய சாப்பிடுவார்கள் என்று அப்போது கூறினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.