தெலங்கானாவில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய பாஜக மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் வீடு மீது இஸ்லாமியர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் தோருமாமிடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவராக பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முகமது அன்வர் இன்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி சிறுபான்மையினர், முகமது அன்வர் வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர் மசூதிக்கு நன்கொடையாக கொடுத்த பொருட்களை அவருடைய வீட்டருகே போட்டு உடைத்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து முகமது அன்வர் மசூதிக்கு உள்நுழையவும் தடை விதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து முகமது அன்வர் விகாரபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.