தெலங்கானாவில் முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவாகப் பேசிய பாஜக மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் வீடு மீது இஸ்லாமியர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டம் தோருமாமிடி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அன்வர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவராக பொறுப்பில் இருக்கிறார்.
இந்நிலையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு பிறகு இஸ்லாமிய பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக முகமது அன்வர் இன்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி சிறுபான்மையினர், முகமது அன்வர் வீடு மீது தாக்குதல் நடத்தினர். அவர் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர் மசூதிக்கு நன்கொடையாக கொடுத்த பொருட்களை அவருடைய வீட்டருகே போட்டு உடைத்து சேதப்படுத்தினர்.
தொடர்ந்து முகமது அன்வர் மசூதிக்கு உள்நுழையவும் தடை விதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து முகமது அன்வர் விகாரபாத் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.