கடனை திரும்ப கேட்டதால் 6 வயது சிறுமியை கடத்தி சென்று கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உபேதுல்லா காலனியில் வசிக்கும் அசன்துல்லா – சானியா தம்பதியினருக்கு அஸ்வீயா என்ற 6 வயது மகள் உள்ளார்.
அசன்துல்லா அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் பெற்ற பெண் வட்டியும் கொடுக்காமல் கடன் தொகையை கட்டாமல் இருந்ததால் அசன்துல்லா பணத்தை கேட்டு வந்துள்ளார்.
இதனால் பணம் வாங்கிய பெண் தனது உறவினர்கள் உதவியுடன் அசன் துல்லா மகள் வீட்டின் வெளியே கடந்த 1 ம் தேதி இரவு விளையாடி கொண்டுருந்தார். ஆனால் வீட்டின் வெளியே இருந்த குழந்தை நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அஸ்வியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ்லு வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சித்தூர் மாவட்ட எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் 12 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த விசாரனையில்
அஸ்மத்துல்லாவிடம் கடன் வாங்கிய பெண் கடனைத் தீர்க்குமாறு அஸ்மத்துல்லா தொடர்ந்து கேட்டு வந்ததால் அவரது மகளை உறவினர்களுடன் சென்று திட்டமிட்டு கடத்தி சென்று கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அனிதா அஸ்வியா பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இதனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
புரட்டி எடுத்த பூரான் 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக,லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்…
This website uses cookies.