திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கடும் பாதுகாப்பையும் மீறி நள்ளிரவு 12 மணிக்கு திருப்பதி மலையை நோக்கி பயணித்த மர்ம காரை ஜீப்பில் தொடர்ந்து விரட்டி சென்ற தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர்.
நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திருப்பதி மலை அடிவாரத்திற்குவந்த கார் ஒன்று சோதனை செய்வதற்கு கூட நிறுத்தாமல் திருப்பதி மலையை நோக்கி வேகவேகமாக ஓட்டி செல்லப்பட்டது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் எதிர்கொள்ள வசதியாக அங்க தயார் நிலையில் இருந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அந்த காரை தங்களுடைய ஜீப் மூலம் தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஆனால் வேகமாக சென்ற அந்த கார் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு சென்று பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி விஜிலென்ஸ் துறையினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக திருப்பதி, திருமலையில் இருந்து போலீசாரும், தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் எதிர்கொள்ள தயார் நிலையில் திருப்பதி மலையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆக்டோபஸ் படையினரும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அடர்ந்த காட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் நான்கு பேரை திருப்பதி திருமலை இடையே அடர்ந்த காட்டுக்குள் இருந்து பிடித்த போலீசார் அவர்களை திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிஜினல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போதைய சூழலில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.