ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி மாலையில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்த போதிலும், குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மறுநாள் காலையில் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் அவரது உடலை கால்வாயில் கண்டெடுத்தனர். மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை எரித்தும், பல கடைகளுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து இன்று கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீ வைத்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் கற்களை வீசி, போலீஸ் தடுப்புகளை உடைத்து, போலீஸ் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பான புகைப்படங்களும். வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.