மாணவி இறப்பில் மர்மம்? காவல் நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள் : தீ வைத்து எரித்ததால் பதற்றம்!!

ஏப்ரல் 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் 17 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. 10-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி மாலையில் டியூஷன் வகுப்புகளுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்த போதிலும், குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்கள் அவரது உடலை கால்வாயில் கண்டெடுத்தனர். மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என பொதுமக்கள் குற்றம்சாட்டி புகார் அளித்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை எரித்தும், பல கடைகளுக்கு தீ வைத்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரும் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆவேசம் அடைந்து இன்று கலியாகஞ்ச் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தீ வைத்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கற்களை வீசி, போலீஸ் தடுப்புகளை உடைத்து, போலீஸ் நிலையம் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்ததால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பான புகைப்படங்களும். வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுகவை முந்தும் தவெக.. கூட்டணி கட்டாயத்தில் இரட்டை இலை? பரபரப்பு சர்வே!

சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…

33 minutes ago

மட்டம் தட்டிய பத்திரிகையாளர்..கொந்தளித்த CSK பயிற்சியாளர்..என்ன நடந்தது.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…

39 minutes ago

நிமிடத்திற்கு ஒரு கோடியா..ஐபிஎல் விட அதிக சம்பளம் வாங்கிய டேவிட் வார்னர்.!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…

1 hour ago

விரைவில் இபிஎஸ் – அண்ணாமலை சந்திப்பு? மத்தியில் ஒலித்த குரல்.. பரபரக்கும் அரசியல் களம்!

அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…

2 hours ago

ஊரு விட்டு ஊரு வந்து பெண்ணை தீக்கிரையாக்கிய கொடூரம்.. தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…

3 hours ago

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…

3 hours ago

This website uses cookies.