டெல்லி : பஞ்சாப் காங்., மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராவார். இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்.
இவர், கடந்த 1988ம் ஆண்டு நடந்த சாலை விபத்து தொடர்பான பிரச்சனையில் குர்னம்சிங் என்ற முதியவரை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் நவ்ஜோத்சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சித்து மேல்முறையீடு செய்திருந்தார்.
சித்துவின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரது மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையையும் உறுதி செய்தது. இதனால், அவர் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிப்பது உறுதியாகியுள்ளது. இது காங்கிரஸ் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
This website uses cookies.