தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி தாண்டா, பாமு பண்டா தாண்டா மற்றும் தல்லபள்ளி தாண்டா ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று (அக்.16) மாலை மெதக் மாவட்டம், சிவம்பேட்டை அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் கார் இறங்கியதில், நிலைத்தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியுள்ளது.
பின்னர் கண்ணிமைக்கும் நொடியில் அருகில் இருந்த ஏரிக்கால்வாயில் நான்கு முறை கார் அடுத்தடுத்து பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், காரில் பயணித்த சாந்தி (38), அம்மு (12), சீதாராம் தாண்டாவைச் சேர்ந்த அனிதா (3), இந்து (35), ஷ்ரவாணி (13), தலபள்ளி தாண்டாவைச் சேர்ந்த சிவராம் (12), துர்கி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க : பாலம் அமைச்சு கொடுங்க.. ஆபத்தான பயணத்தில் திருவள்ளூர் கிராமத்தினர்..
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.