இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்தியாவில் தொழிலாளர் சட்டவிதிகளின்படி ஒரு மனிதன் சராசரியாக 8 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்பதே விதி. இதைத்தான் நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இப்படியிருக்கையில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கூறிய கருத்து தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அதாவது, மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்த நாடுகளுடன் நாம் போட்டிப் போட வேண்டும் என்றால் நமது இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். அதாவது, 5 நாட்கள் பணி நாட்களைக் கொண்டவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 14 மணிநேரமும், 6 நாட்களை வேலை நாட்களாகக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணிநேரமும் வேலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தக் கருத்து குறித்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பெரும் விவாதமே நடத்தி வருகின்றனர்.
நெட்டிசன் ஒருவர், “உங்களிடம் வேலை செய்பவர்களை அடிமைகள் என நினைக்கிறார் போல, இந்த நவீன காலத்தில் மீண்டும் அடிமை முறையை கொண்டு வர முயற்சிக்கிறார்,” என விமர்சித்துள்ளார்.
“5 நாட்களுக்கு 14 மணி நேரம் வேலையுடன் சேர்த்து, வேலைக்கு சென்று வருவதற்கு, ஓரிரு மணி நேரம் போய்விடும். பிறகு எப்படி சாப்பிடுவது, தூங்குவது. அதுமட்டுமில்லாமல், குடும்பத்தினருடன் எப்படி நேரம் செலவழிக்க முடியும்,” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருவரோ, “12 மணிநேரம் வேலை செய்தால் மனதளவிலும், உடலளவிலும் பலவீனம் அடைந்து விடுவோம். பிறகு சம்பாரிக்கும் பணத்தை மருத்துவமனைகளில் செலவிடச் சொல்கிறீர்களா..?”, என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல, நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.