ஆந்திரா : சார்ஜ் செய்யும்போது மின்சார பைக் பேட்டரி வெடித்து கணவன் பலி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா சூர்யாராவ்பேட்டை அருகே குலாபி தோட்டப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார். நேற்று முன்தினம் அவர் புதிதாக மின்சாரத்தால் இயங்கும் பைக் ஒன்றை வாங்கினார்.
புதிதாக வாங்கிய பைக்கை வீட்டின் படுக்கை அறையில் சார்ஜ் போட்டு சிவகுமார், மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் இரவு தூங்கி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று மோட்டார் சைக்கிளின் பேட்டரி வெடித்து விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் சிவக்குமார் மரணம் அடைந்த நிலையில், அவருடைய மனைவி 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இருந்து வெளியான புகையை சுவாசித்து அவருடைய இரண்டு குழந்தைகளும் கவலைக்கிடமான நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி விஜயவாடா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.