நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி பகுதியில் திருப்பதி மலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதற்கு வசதியாக 54 லட்சம் ரூபாய் செலவில் ஷெட் ஒன்று கட்டப்பட்டது.
அதனை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டிக்கெட்டுகள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆகியவை மீண்டும் வழங்கப்படும்.
எத்தனை டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு வழங்குவது என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம். அதே போல் காலை 6:00 மணிக்கு தினமும் துவங்கும் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரத்தை காலை 8 அல்லது 8:30 மணியாக மாற்றி அமைக்கவும், டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசன நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அப்போது கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.