கேரளா: நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நடிகர் திலீப் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நடிகர் திலீப் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக திலீப் உள்பட 6 பேர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கிலும் திலீப் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸ் அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக வழக்கப்பதிவு செய்துள்ளனர்.
சதிதிட்டத்தை நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், என்மீது பதிவு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீகுமார் ஆஜரானார்.
இந்த வழக்கில் நடிகையையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் இந்த வழக்கில், நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கும் முன் நடிகை தரப்பிலும் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வருகிற 21ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.