சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகம்.. தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் அறிமுகம்.. தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த தரிசன நேரம் 18 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் , மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க தேவஸ்வம் போர்டு சிறப்பு வரிசையில் ஒன்று அமைத்துள்ளது. அதன்படி சபரிமலையில் உள்ள நடைபந்தலில் ஒன்பதாம் வரிசை வழியாக வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அங்கிருந்து காவல்துறை உதவியுடன் 18-ம் படி ஏறி சன்னதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த புதிய முறை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரிசையில் குழந்தைகள் மற்றும் அவருடன் வரும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

9 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

10 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

10 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

11 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

11 hours ago

This website uses cookies.