நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இண்டியா கூட்டணி.. தகனம் செய்த நிதிஷ்குமார் : காங்., மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2024, 2:44 pm

நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இண்டியா கூட்டணி.. தகனம் செய்த நிதிஷ்குமார் : காங்., மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை குறித்து காங்கிரஸ் தலைவர் பிரமோத் கிருஷ்ணம் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் மிகச் சிறந்த மற்றும் புத்திசாலி தலைவர்கள் உள்ளனர். ஒருபுறம், அனைத்து அரசியல் கட்சிகளும் 2024 தேர்தலுக்கு தயாராகி வருகின்றன, மறுபுறம், ஒட்டுமொத்த காங்கிரசும். கட்சி அரசியல் சுற்றுலா செய்கிறார்கள். உண்மையில், 2024 க்குப் பிறகு, 2029 தேர்தலுக்கு நாங்கள் தயார்படுத்திக் கொள்கிறோம் என்று கூறினார்.

மேலும், 2024 தேர்தலுக்கு நாங்கள் தயாராகி இருந்தால், இது நடந்திருக்காது. இந்திய கூட்டணி குறித்து அவர் கூறுகையில், “இந்திய கூட்டணி, துவக்கத்தில் இருந்தே, தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. பின், ஐ.சி.யூ.,க்கு சென்றது. அதன் பின், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டது. நேற்று, நிதிஷ்குமார் தகனம் செய்தார்” என கூறினார்.

ஜனவரி 14-ஆம் தேதியன்று மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கி நாகாலாந்து, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை கடந்து இன்று பீகார் மாநிலத்துக்குள் நுழைந்துள்ளார்.

பீகாரில் ராகுல் காந்தி நுழைந்தபோது மாநில தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். 2020 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு ராகுல் காந்தி பீகார் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்