எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்திக்கு அரசு இல்லத்தை காலி செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு (52) குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டு, ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், எம்பி என்ற முறையில் அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால், அரசு இல்லத்தை காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.