தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பணம் படைத்தவர்களுடன் பாலியல் உறவு வைத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த அழகியை போலீசார் கைது செய்தனர்.
ஓடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா நாக். 26 வயதான இவர் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார். குடுமப சூழல் காரணமாக புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்த இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அங்கிருந்து பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்தார்.
பார்லரில் வேலை பார்த்து வந்த போது, கடந்த 2018ம் ஆண்டு ஜெகபந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். பழைய கார்களை விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பணக்காரர்களாக வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அழகு நிலையத்தில் வேலை பார்த்த போதே, அர்ச்சனா பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஜெகபந்துவுக்கு பழக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செய்து, அதனை புகைப்படம், வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினர்.
ஒடிசாவின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பறித்து நான்கே ஆண்டுகளில் ரூ.30 கோடி வரை சுருட்டியுள்ளார் அர்ச்சனா.
திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அர்ச்சனா – ஜெகபந்து மீது அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அப்போதுதான், இவர்களின் மோசடித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. கணவருடன் சேர்த்து அர்ச்சனாவை போலீசார் கைது செய்ததுடன், 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
26 வயதே ஆன பெண் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கான ரூபாயை சுட்டியது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜாமீன் கோரி அர்ச்சனா நாக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.