தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பணம் படைத்தவர்களுடன் பாலியல் உறவு வைத்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த அழகியை போலீசார் கைது செய்தனர்.
ஓடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா நாக். 26 வயதான இவர் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவராவார். குடுமப சூழல் காரணமாக புவனேஸ்வருக்கு குடிபெயர்ந்த இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அங்கிருந்து பியூட்டி பார்லரில் வேலைக்கு சேர்ந்தார்.
பார்லரில் வேலை பார்த்து வந்த போது, கடந்த 2018ம் ஆண்டு ஜெகபந்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொண்டனர். பழைய கார்களை விற்கும் ஷோரூம் ஒன்றை நடத்தி வந்த ஜெகபந்துவுக்கு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பிரபலங்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பணக்காரர்களாக வேண்டும் என்று திட்டம் தீட்டினர். அழகு நிலையத்தில் வேலை பார்த்த போதே, அர்ச்சனா பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஜெகபந்துவுக்கு பழக்கமான தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளை, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருக்க செய்து, அதனை புகைப்படம், வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினர்.
ஒடிசாவின் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், முன்னணி தொழிலதிபர்கள் உள்ளிட்டோரிடம் பணம் பறித்து நான்கே ஆண்டுகளில் ரூ.30 கோடி வரை சுருட்டியுள்ளார் அர்ச்சனா.
திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டிய நிலையில், அர்ச்சனா – ஜெகபந்து மீது அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அப்போதுதான், இவர்களின் மோசடித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது. கணவருடன் சேர்த்து அர்ச்சனாவை போலீசார் கைது செய்ததுடன், 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
26 வயதே ஆன பெண் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கான ரூபாயை சுட்டியது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, ஜாமீன் கோரி அர்ச்சனா நாக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.