ஆந்திரா : பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவருக்கு கும்மாங்குத்து கொடுத்த பெண்ணின் கணவரின் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட பிற்படுத்தப்படோர் சங்க தலைவராக பணியாற்றியவர் மங்களகிரிபட்டினத்தை சேர்ந்த ரங்கநாத். ரங்கநாத் பதவியில் இருந்த போது சங்கத்தின் சக பெண் உறுப்பினர்கள் பலரிடம் கைமாற்றாக பணம் வாங்கிக் கொடுத்து திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்.
மேலும் சில பெண் உறுப்பினர்களிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்று புகார்கள் உள்ளன. எனவே அவர் பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் சக பெண் உறுப்பினர் ஒருவரிடம் இருந்து பணம் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது, மேலும் ஒரு பெண் உறுப்பினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் மீது மங்களகிரி காவல் நிலையம் மற்றும் தாடி பத்திரி காவல் நிலைய ஆகியவற்றில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிற்படுத்தப்பட்டோர் சங்க பெண் உறுப்பினர் ஒருவரிடம் ரங்கநாத் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக அந்த பெண் தன்னுடைய கணவரிடம் ரங்கநாத்தின் சில்மிஷ முயற்சி பற்றி கூறினார்.
அப்போது அவருடைய கணவர் மனைவியுடன் சேர்ந்து ரங்கநாத் வீட்டுக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தார். அப்போது அந்தப் பெண்ணின் கணவர் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டார். வலி தாங்க முடியாத அதிகாரி ரங்கநாத் ஐயோ, அம்மா என்று அலறினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மங்களகிரி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.