தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் நிம்மல நரசிங்கராவு இறந்துவிட்டதாக ஆதாரங்களை தயார் செய்த வருவாய்துறை அதிகாரிகள் அவருடைய நிலத்தை இரண்டு பேருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டனர்.
நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் பலமுறை ஆஜராகி நிரூபித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமிலும் தான் உயிரோடு இருப்பதாக நேரில் ஆஜராகி அவர் நிரூபித்ததாக தெரியவந்துள்ளது.
ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த நரசிங்கராவு மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடி மீது ஏறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அவருடைய தற்கொலை முயற்சியை பார்த்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரோடு இருப்பவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை தயார் செய்து அவருக்கு சொந்தமான நிலத்தை வேறு இரண்டு பேருக்கு பட்டா போட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.