தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் நிம்மல நரசிங்கராவு இறந்துவிட்டதாக ஆதாரங்களை தயார் செய்த வருவாய்துறை அதிகாரிகள் அவருடைய நிலத்தை இரண்டு பேருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டனர்.
நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் பலமுறை ஆஜராகி நிரூபித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமிலும் தான் உயிரோடு இருப்பதாக நேரில் ஆஜராகி அவர் நிரூபித்ததாக தெரியவந்துள்ளது.
ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த நரசிங்கராவு மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடி மீது ஏறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அவருடைய தற்கொலை முயற்சியை பார்த்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரோடு இருப்பவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை தயார் செய்து அவருக்கு சொந்தமான நிலத்தை வேறு இரண்டு பேருக்கு பட்டா போட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.