ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து தொழிலதிபர்களை கவர்ந்து பப்பிற்கு அந்த தொழிலதிபர்களை வரவழைத்து மது அருந்த செய்து பெருமளவில் பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலில் ஏழு பேர் கைது.
வடமாநிலங்களை சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து ஹைதராபாத்தில் வசிக்கும் தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். அவர்கள் விரித்த ஆன்லைன் வலையில் சிக்கிய சபல தொழிலதிபர்களை ஹைதராபாத் மாதாப்பூரில் உள்ள மோஷ்பப்பிற்கு வரவழைத்த கும்பல் அழகான இளம் பெண்கள் மூலம் விலை உயர்ந்த மது வகைகளை அவர்களுக்கு வழங்கி குடிக்க செய்துள்ளனர்.
அப்போது அந்த சபல தொழிலதிபர்கள் நீங்கள் காண்பித்த பெண்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டபோது, முதலில் மது அருந்துங்கள். நீங்கள் கேட்ட பெண்கள் இப்போது வந்து விடுவார்கள். நீங்கள் ஜாலியாக இருப்பதற்கு தேவையான அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம் என்று கூறி சமாளித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அழகான இளம் பெண்கள் தொழிலதிபர்களுக்கு மது வழங்குவது, இளம் அழகிகள் பற்றி அவர்கள் விசாரித்த முறை ஆகியவற்றை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து கொண்ட அந்த கும்பல் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க தவறினால் உங்களுடைய இந்த செயல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி பெருமளவில் பணம் வசூலித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்க பதிவு செய்த மாதாப்பூர் போலீசார் அழகிகளின் படங்களை காண்பித்து அழகான இளம் பெண்கள் மூலம் மது பரிமாறி பெரும்பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலில் ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தவிர இந்த வழக்கில் தொடர்புடைய பெண்களையும் போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.