உம்மன் சாண்டியின் கடைசி ஆசை…. அரசு மரியாதையின்றி இன்று உடல் நல்லடக்கம்!!!

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி. இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து அவரது உடல் பெங்களூருவில் உள்ள அவருடைய நண்பரும், முன்னாள் மந்திரியுமான டி.ஜான் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்ட உம்மன்சாண்டி உடல், அவரது பூஜப்புரை புதுப்பள்ளி இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் தலைமை செயலக தர்பார் அரங்கில் உம்மன்சாண்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு முதல்-மந்திரி பினராயி விஜயன், மந்திரிகள், உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து இரவு 8 மணிக்கு புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கேரள காங்கிரஸ் மாநில தலைமையகமான இந்திரா பவனுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் உம்மன்சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து இரவு உம்மன் சாண்டியின் உடல் திருவனந்தபுரத்திலுள்ள புதுப்பள்ளி இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கிருந்து நேற்று காலை 7 மணிக்கு உம்மன்சாண்டியின் உடல் ஊர்வலமாக புறப்பட்டது. திருவனந்தபுரம் மட்டுமல்லாமல் வழிநெடுக அவர் உடலுக்கு காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனால் கொல்லம் மாவட்டத்தை சென்றடைய 8 மணி நேரம் ஆனது. இரவு 9 மணிக்கு கொட்டாரக்கரையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் இன்று (வியாழக்கிழமை) காலையில் கோட்டயம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின் உம்மன்சாண்டி உடல் அடக்கம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உடல் அடக்கம் அரசு மரியாதையின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது உம்மன்சாண்டி சிகிச்சையில் இருந்த போது நான் மரணம் அடைந்த பின் அரசு மரியாதையின்றி எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி, மகன் மற்றும் மகள்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

அதன்படி அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அரசு மரியாதை இன்றி உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது மகன் சாண்டி உம்மன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அரசுக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறினார். உம்மன் சாண்டியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களது கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டதாக தலைமை செயலாளர் டாக்டர் வேணு அறிவித்து உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!

பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…

1 minute ago

பிக்பாஸ்ல இருந்து Payment வரல; அவன் இப்படி ஆனதுக்கு காரணம்? ஸ்ரீயின் தோழி ஓபன் டாக்…

 ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …

1 hour ago

கூட்டணிக்கு ‘துண்டு’? பிரதமர் மோடிக்கு திடீர் புகழாரம் சூட்டும் பிரேமலதா!!

பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…

4 hours ago

அது ஒரிஜினல் வீடியோதான்-ஸ்ருதி நாராயணனை குறித்து பகீர் கிளப்பிய ஷகீலா…

சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…

4 hours ago

சமந்தாவுக்கு கெட் அவுட்.. புதுமனைவிக்கு கட் அவுட் : நாக சைதன்யா டபுள் கேம்!

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…

5 hours ago

துருவ் விக்ரமுடன் டேட்டிங் சென்ற அனுபமா? இணையத்தை அதிரவைத்த அந்தரங்க புகைப்படம்…

துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…

5 hours ago

This website uses cookies.