சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமராவதி மாஸ்டர் பிளான் மற்றும் இன்னர் ரிங் ரோடு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆந்திர மாநில சிஐடியிடம் எம்எல்ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த 6ம் தேதி சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, லிங்கமனேனி ரமேஷ், லிங்கமானேனி வெங்கட சூர்யா ராஜசேகர், LEPL புராஜெக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனி குமார் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எதிர்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்த வரவேற்பினை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, இதுபோன்று பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பதாக தெலுங்குதேசக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.