Categories: இந்தியா

கேரளாவில் இயல்பு வாழ்க்கையை முடக்கும் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்…அடுத்த 2 நாட்களுக்கு எச்சரிக்கை..!!

கோழிக்கோடு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் சில இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு மாநிலத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்றும், அதன்பிறகு இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம், கணித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழையைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்குவதை கருத்தில் கொண்டும், நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க அதிகாரிகள் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு நாள் முன்பு பல உத்தரவுகளை பிறப்பித்தார்.

மழை குறையும் வரை மக்கள் ஆறுகள் மற்றும் பிற நீர்நிலைகளில் இருந்து மக்கள் விலகி இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளுக்கும், கடல் அலைகள் அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை, வழக்கத்தை விட ஐந்து நாட்களுக்கு முன்னதாக, மே 27ம் தேதிக்குள் முதல் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

உதவி ஏன் கேக்குறீங்க..அத முதல்ல நிறுத்துங்க..யாரை தாக்குகிறார் இயக்குனர் செல்வராகவன்.!

ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…

1 minute ago

EMI வசூலிக்க சென்ற நபர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.. விசாரணையில் பகீர் பின்னணி!

அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

25 minutes ago

தாயே மகளுக்கு செய்த கொடூரத்தின் உச்சம்.. நீலகிரியில் அதிர்ச்சி!

நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…

1 hour ago

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?

வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…

2 hours ago

இருதரப்பும் பேச என்ன இருக்கு? – உச்ச நீதிமன்ற உத்தரவு.. சீமான் ரியாக்‌ஷன்!

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…

2 hours ago

கதற..கதற..மின்னல் வேகத்தில் ‘டிராகன்’ வசூல்..!

100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…

3 hours ago

This website uses cookies.