கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நிராகரித்துள்ளார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மீரட் நகரில் கடந்த 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்தியில் ஆளும் பாஜகவும், மாநிலத்தில் ஆளும் பாஜகவும் தான் இதற்கு பொறுப்பு என்றும் ஒவைசி கூறினார்.
இதனிடையே, இந்த சம்பத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகத்திற்குரிய இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவைசி மீதான தாக்குதலுக்கு பிறகு ஒவைசிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில், தனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவையில்லை என்று நேற்று மக்களவையில் ஒவைசி தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்களை வெறுப்பு மயமாக்குவது யார்? என்றும், என் மேல் தாக்குதல் நடத்தியவர்களை யூஏபிஏ சட்டத்தின் கீழ் ஏன் தண்டிக்க கூடாது? எனக் கூறிய அவர், எனக்கு மரணம் குறித்து பயமில்லை என்றும், எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு எல்லாம் வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.