குழந்தைகள் அதிகம் விரும்பும் நூடுல்ஸ் உணவால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாமலியை சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி, திடீரென நிலைகுலைந்துள்ளார். தொண்டையில் நூடுல்ஸ் சிக்கிய பின் வாந்தி எடுத்துள்ளார்.
பிறகு மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் அடிமாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கூட, சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுவது, சிறுமியின் தொண்டை அல்லது மூச்சுக்குழாயில் நூடுல்ஸ் சிக்கியிருப்பதால் மூச்சு விட சிரமம் ஏற்பட்டு மரணம் வரை கொண்டு சென்றுள்ளதாக கூறினர்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளா மட்டுமல்லாமல், குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் அதிகம் விரும்பும் உணவுப் பொருளான நூடுல்ஸை இனி கவனத்தோடு கொடுக்க வேண்டும் என்பதே இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு உணர்த்தியுள்ளது.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.