நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த குழப்பம் ஏற்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அநேகமாக, அடுத்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 9 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறுவதாகக் கருதி, தேர்தல் சார்ந்த பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை வெளியான நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 16ம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதா..? என்பது குறித்த விவாதம் எழுந்தது.
இதையடுத்து டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் விடுத்துள்ள X தளப் பதிவில் கூறியிருப்பதாவது ;-சுற்றறிக்கையை குறிப்பிட்டு தேர்தல் தொடங்கும் உத்தேச நாள்தானா? என்பதை தெளிவுபடுத்தும்படி சில ஊடக கேள்விகள் வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திட்டமிடலின்படி அதிகாரிகள் தங்கள் பணிகளை திட்டமிட்டு செய்து முடிப்பதற்கு மட்டுமே இந்த உத்தேச தேதி குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.