தற்போதைய சூழலில் இந்தியாவை உலகமே உற்றுப் பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது :- குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் இன்று. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள சூழல், தற்போது கூட்டத் தொடர் கூடுகிறது. எனவே, இது முக்கியமானதாகும். இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஜி20 மாநாடு என்பது சாதாரண தூதரக நிகழ்ச்சி கிடையாது. இந்தியாவின் திறமையை உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டுவதற்கான பெரிய வாய்ப்பு. இந்த மாநாட்டின் மூலம் இந்தியாவை பற்றி உலகமே தெரிந்து கொள்ள செய்வதற்கான அரிய வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமாக முடிவுகள் எடுக்கவும் இந்தக் கூட்டத் தொடரில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து கட்சிகளும் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும், எனக் கூறினார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.