அனிகேத் போசலே என்ற நபர் ,மும்பை சர்ச்கேட்டில் இருந்து விரார் என்ற பகுதியை நோக்கி லோக்கல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் ஜஸ்பீர் சிங், பயணியிடம் ஏசி கோச்சில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாததைக் கண்டறிந்துள்ளார். எனவே, அபராதம் கட்டச் சொன்னார்.
இதற்கிடையே, அபராதம் குறித்து அனிகேத் போசலே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது, அடிதடியில் முடிந்துள்ளது. ஜஸ்பீர் சிங்கும் மற்ற பயணிகளும் டிக்கெட் பரிசோதகரை தாக்கியுள்ளனர். மேலும், டிக்கெட் பரிசோதகரின் சட்டையை கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதை, யாரோ வீடியோ எடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் டிக்கெட் பரிசோதகர் காயமடைந்தது மட்டும் இன்றி, மற்ற பயணிகளிடம் இருந்து அபராதமாக வசூலித்த 1,500 ரூபாயையும் பறி கொடுத்துள்ளார்.
இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களால் நளசோபரா நிலையத்தில் ரயிலில் இருந்து அந்த பயணி இறக்கிவிடப்பட்டார்.மேலும் பயணியிடம் அபராதத் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தியதுடன், ஜஸ்பர் சிங்கிடம் முறை தவறி நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பினர்.பயணி ஒருவர் டிக்கெட் பரிசோதகரைத் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.