ரத்தன் டாடா குறித்த சர்ச்சை பதிவை பேடிஎம் சிஇஓ தற்போது நீக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது.
மும்பை: இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை நள்ளிரவு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 86 வயதான இவர், இறக்கும் தருவாயில் டாடா அறக்கட்டளைகளின் தலைவராகவும், எமிர்ட்டஸின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இறக்கும் வரை திருமணமாகாத இவரது வாழ்க்கையில், அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு ஏற்றார் போன்று உற்பத்தி பொருட்களை அறிமுகம் செய்து வைத்தவர்.
இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு நேரிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நினைவுகளைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பேடிஎம் தலைமைச் செயல் அதிகாரி விஜய் சேகர் ஷர்மா இரங்கல் குறிப்பு ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில், “ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த அவர் ஒரு மாமனிதர். அனுபவம் வாய்ந்த ஒரு தொழிலதிபருடனா கலந்துரையாடல்களை அடுத்த தலைமுறை தொழில்முனைவோர் இழந்துள்ளனர். வீர வணக்கம் சார்.. சரி, டாடா பாய் பாய் (Ok Tata Bye Bye) என பதிவிட்டிருந்தார். இது நெட்டிசன்கள் மத்தியில் எதிர் கருத்துகளை வரவழைத்தது.
இதையும் படிங்க: டாடா அறக்கட்டளை தலைவராக ரத்தன் டாடா சகோதரர்.. யார் இந்த நோயல் டாடா?
இந்த நிலையில், அந்த பதிவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பேடிஎம் சிஇஓ விஜய் சேகர் ஷர்மா நீக்கியுள்ளார். தற்போது இது பேசுபொருளாகியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.