இதென்னடா சிறுத்தைக்கு வந்த சோதனை.. ஊருக்குள் புகுந்த சிறுத்தையின் முதுகில் ஏறி செல்பி எடுத்த மக்கள்….ஷாக் வீடியோ!!
மத்தியப் பிரதேசத்தின் இக்லேராவைச் சேர்ந்த கிராமவாசிகள் சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
இந்நிலையில், முதலில் கிராமவாசிகள் சிறுத்தையை பார்த்ததும் பயந்தனர், ஆனால் பின்னர் சிறுத்தை ஆக்ரோஷமாக இல்லாமல் சோம்பலாக இருப்பதைப் பார்த்தபோது, அது உடம்பு சரியில்லை என்று புரிந்து கொண்டனர். கிராம மக்கள் சிறுத்தையை சுற்றி வளைத்து விளையாட ஆரம்பித்தனர்.
சிறுத்தையுடன் விளையாட்டுத்தனமான செல்யல்களில் ஈடுபட்டதுடன், அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். வைரலாகும் அந்த வீடியோ, உடல்நிலை சரியில்லாத சிறுத்தை ஊர் மக்களால் சூழ்ந்திருப்பதையும், ஒருவர் சிறுத்தையின் முதுகில் அமர்ந்திருப்பதையும் காட்டுகிறது.
பின்னர், அவர்களில் ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சிறுத்தையை மேல் சிகிச்சைக்காக இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லல்பட்டுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.