இந்தியா

திருப்பதியில் அவலம்.. மார்பளவு தண்ணீரில் சடலம்!

திருப்பதியில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவரின் உடலை மார்பளவு தண்ணீரைக் கடந்து சென்று தகனம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது சுருட்டுப்பள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் கஸ்தூரி நாயுடு என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், அவரது உடலை குடும்ப வழக்கப்படி தகனம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகினர். ஆனால், அந்த ஊரின் சுடுகாடு ஓடையை அடுத்து உள்ளது. இதன் காரணமாக, அந்தக் கிராமத்தில் யாராவது இறந்து விட்டால், உடலை ஓடையைக் கடந்து தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும்.

இதனிடையே, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, திருப்பதி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் சுருட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள அந்த ஓடையிலும் மார்பளவு உயரம் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

இதையும் படிங்க: 3வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.. தனியார் கல்லூரியில் அதிர்ச்சி!

இந்த நிலையில், உயிரிழந்த கஸ்தூரியின் உடலை, கிராம பொதுமக்கள் மார்பளவு தண்ணீரில் கடந்து சென்று தகனம் செய்தனர். ஏற்கனவே ஓடையைக் கடந்து தான் சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதால், தற்போது பெய்த மழையால் மேலும் நீர் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, இதற்குத் தேவையான மாற்றுப் பாதையை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.