டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளை கொண்டுவர தடையில்லை என ஒன்றிய அரசு அறிவித்ததை அடுத்து, இந்தியர்களுடன் செல்லப்பிராணிகளும் வந்து சேர்ந்தன.
உக்ரைனில் படித்து வரும் ரிஷப் கவுஷிக் என்ற இந்திய மாணவர், தான் வளர்த்து வரும் நாயை விட்டு அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். மேலும் நாயுடன் இந்தியா வர உதவிடுமாறு சமூக வலைத்தளங்களில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து ஒன்றிய மீன்வளம், கால்நடைகள் மற்றும் பால் வளத்துறை அமைச்சகத்தில் பிராணிகள் நல அமைப்பான பீட்டா முறையிட்டது. இதனை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்கள் தங்களுடன் நாய், பூனை ஆகிய வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு வரும் வகையில் விதிகளை ஒன்றிய அரசு தளர்த்தியது.
இதையடுத்து உக்ரைனில் இருந்து தாயகம் வருபவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்து வருகின்றனர். இந்திய விமானப்படை விமானம் மூலம் நேற்று தாயகம் வந்த மாணவர்கள் தங்கள் செல்ல நாய்களுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சியை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மேலும், காசியாபாத் வந்த விமானத்தில் ஷாகித் என்ற மாணவர் நாயையும், கௌதம் என்ற மாணவர் பூனையையும் அழைத்து வந்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.