பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்து மத்திய அரசு 5 ஆண்டு கால தடை விதித்துள்ளது.
கடந்த 22ம் தேதி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சுமார் 15 மாநிலங்களில், PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள PFI அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையை தொடர்ந்து நடத்தப்பட்ட கைது நடவடிக்கையின் மூலம், மொத்தம் அந்த அமைப்பைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகள் சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பினால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் தடை விதிக்கப்படுவதற்கு மத்திய அரசு பல்வேறு காரணங்களை கூறியுள்ளது.
அதாவது, கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலம் பாட்னாவுக்கு பயணம் செய்தார். அந்தக் கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் சதித் திட்டம் தீட்டி இருப்பாகவும், இதற்காக, ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து வைத்திருந்ததாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும், இந்த அமைப்பினால் பல ஆண்டுகளாக ரூ.120 கோடி ரூபாய் திரட்டப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பிப்ரவரி 2020-ல் டெல்லி கலவரங்களுக்கு வழிவகுத்த பிரச்னைகள், ஹத்ராஸுக்கு பி.எஃப்.ஐ. உறுப்பினர்கள் வருகை உள்ளிட்டவற்றிற்கு இந்த ரொக்கம் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த அமைப்பை தடை விதிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதோடு, PFI மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஒரு சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக செயல்படுகின்றன என்பது போல் தோன்றினாலும், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மூளை சலவை செய்து, தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் செயல்பட்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்க திட்டம் தீட்டப்படுகிறது. நாட்டின் அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுத்தப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்ட PFI, நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான, மத நல்லிணக்கம் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PFIயின் முக்கிய உறுப்பினர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) தலைவர்கள் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் (JMB) உடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும், ISIS போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் PFI அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.