பாகிஸ்தானில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 57 நாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்தக் கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு பாகிஸ்தானில் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் மசரத் ஆலம் பட்டிற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது :- இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு அழிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஊக்கப்படுத்தாது என நம்புவதாக தெரிவித்துள்ளது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்களை…
வழக்கு எண் 18/9, மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று,…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில்…
தமிழ்நாடு அரசின் விண்வெளி தொழில் கொள்கைக்கு நேற்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை…
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
This website uses cookies.