PM Modi பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

PM Modi பதறுகிறார்.. கண்ணீர் விட்டு அழுதாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை : ராகுல் காந்தி தாக்கு!

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

அதே சமயம் தேர்தலை முன்னிட்டு பாஜகவும், காங்கிரஸும் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

இதில் குறிப்பாக காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கு ராகுல் காந்தியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் கண்ணீர் சிந்துவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கர்நாடகாவின் பிஜப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, பாஜக அரசு ஒரு சிலரை கோடீஸ்வரர்களாக்கும். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதிகளாக்கும்.
உண்மையான பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசை திருப்பி வருகிறார்.

மேலும் படிக்க: மூட்டை சுமக்கும் முன்னாள் அமைச்சர்.. இணையத்தில் தீயாய் பரவும் VIDEO : முழு விபரம்.!!

அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே உங்களுக்கு உரிமைகளும், குரல்களும், இடஒதுக்கீடுகளும் கிடைத்துள்ளன. ஆனால், பிரதமர் மோடி இதை உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார்.

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து உள்ளதாகவும், 70 கோடி மக்களிடம் இருக்கவேண்டிய செல்வம் 22 பேரிடம் உள்ளது எனவும் குற்றசாட்டியுள்ளார்.

இதுபோன்று, நாட்டின் 40 சதவீத செல்வத்தை ஒரு சதவீத மக்கள் மட்டுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
மேலும், வறுமை, பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகளில் குறித்து மோடி வாயை திறப்பது இல்லை.

இந்தப் பிரச்னைகளை தீர்க்க காங்கிரஸால் மட்டுமே முடியும். எனவே, முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி பீதியில் உள்ளனர்.

பிரதமர் பதற்றத்தில் இருப்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. இதனால் கூடிய விரைவில் பிரதமர் மோடி கண்ணீர் சிந்துவார் எனவும் விமர்சித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

14 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

15 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

15 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

15 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

15 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

15 hours ago

This website uses cookies.