மத்திய அரசு கட்டி வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. மாநிலங்களின் உருவாக்கம் காரணமாக எம்பிக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அமருவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே, ராஜபாதை சீரமைப்பு மற்றும் குடியரசு துணை தலைவர் இல்லம், பிரதமர் இல்லம் உள்ளிட்ட புதிய கட்டுமானங்கள் அடங்கிய சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரைபடத்தையும் வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. 2023ம் ஆண்டில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திடீரென ஆய்வு செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.