பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்பட சில மாநிலங்கள் குறைக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது ;- கடந்த 2021 நவம்பர் மாதமே எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்து விட்டது. ஆனால், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் குறைக்கவில்லை. வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.
தமிழகம் உள்பட எதிர்கட்சிகள் ஆளும் 4 மாநிலங்கள் மத்திய அரசின் எந்த அறிவிப்புகளுக்கும் செவி சாய்ப்பதில்லை. இதனால், அம்மாநில மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.111க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வாட் வரியை குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு உதவியாக இருக்கும், எனக் கூறினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
This website uses cookies.