பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தி கேரள ஸ்டோரி திரைப்படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
சுதீப்டோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன. இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள அரசு நேரடியாகவே இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தி கேரள ஸ்டோரி திரைப்படம் இன்று திரையிடப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது தி கேரள ஸ்டோரி படத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது :- தீவிரவாதம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதை தி கேரள ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்தை தான் தடை செய்ய காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. இந்த படத்தை தடை செய்ய முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் சக்திகளுக்கு காங்கிரஸ் ஆதரவு ஆதரவளிக்கிறது, என்றார்.
மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.